india [Imagesource : Twitter@/kanimozhi]
கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. மணிப்பூர் வன்முறையில் 100க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நிவாரண முகாம் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைக்கு மத்தியில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாக்கி மேலும், பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவரை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குழு நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் விவகாரம் பற்றி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து இந்தியா கூட்டணி முறையிடுகிறது. இந்த சந்திப்பில், மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி 21 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…