இந்தியா பங்கெடுக்காவிட்டால் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியாது – உலக சுகாதார நிறுவனம்.!

Published by
Dinasuvadu desk
தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
நேற்று தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரத்துறை,  மற்றும் மத்திய அமைச்சர் மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டில் பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பும் , பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
நாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, எதிர்கொள்ள வரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் மொத்த உலகமும் தயாராக வேண்டும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள்ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது.
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். “எபோலா”தடுப்பூசி 5 ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டு அல்லது அதை விட குறைந்த காலத்தில் உருவாக்குவதுதான் நமது நோக்கம்.
தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும்  என கூறினார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

46 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago