இந்தியா பங்கெடுக்காவிட்டால் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியாது – உலக சுகாதார நிறுவனம்.!

Published by
Dinasuvadu desk
தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
நேற்று தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரத்துறை,  மற்றும் மத்திய அமைச்சர் மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டில் பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பும் , பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
நாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, எதிர்கொள்ள வரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் மொத்த உலகமும் தயாராக வேண்டும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள்ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது.
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். “எபோலா”தடுப்பூசி 5 ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டு அல்லது அதை விட குறைந்த காலத்தில் உருவாக்குவதுதான் நமது நோக்கம்.
தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும்  என கூறினார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago