#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!

Published by
kavitha

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய -சீன ராணுவ கமாண்டர் அளவிலான, 6ஆம் சுற்று பேச்சுகளின் முடிவில், இருதரப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு இருநாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை, ஆர்வத்துடன் செயல் படுத்துவதாகவும்  இரு படைகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லையில், அமைதி திரும்பவும், களத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு முடிவு கட்டவும், தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கையில் இறங்குவதை தவிர்க்கவும், இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்திலான, ஏழாம் சுற்று பேச்சை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
kavitha

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

41 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago