இந்தியா எல்லா முனைகளிலும் திறமை மிக்க நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தேசிய கேடட் கார்ப்ஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் உள்ள காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரதமரின் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps (NCC) கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் மற்றும் எல்லைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்பதை கடந்த ஆண்டு இந்தியா காட்டியுள்ளது.
கொரோனாக்கு எதிரான “மேட் இன் இந்தியா” தடுப்பூசிகளை தயாரிப்பதை குறிப்பிடுகையில், இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு சவால் விடுபவர்களின் நவீன ஏவுகணை அழித்தாலும், நாடு எல்லா முனைகளிலும் திறமை மிக்க உள்ளது. இந்தியா, சீனாவுடன் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது.
தடுப்பூசியில் இந்தியா ‘aatmanirbhar’ என்றால், அது தனது ஆயுதப் படைகளை நவீன மயமாக்குவதற்கும் சம வீரியத்துடன் முயற்சி செய்து வருகிறது. நமது நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாட்டில் சிறந்த போர் இயந்திரங்கள் உள்ளன.
ரஃபேல் விமானங்கள் இந்தியா வரும்போது நடுவழியில் எரிபொருள் நிரப்பப்பட்டதை குறிப்பிடுகையில், சவுதி, கிரேக்க நாடுகள் உதவின. இது வளைகுடா நாடுகளுடனான நமது வளர்ந்து வரும் உறவை காட்டுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் செய்து வருகிறோம். விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளராக விரைவில் அறியப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…