ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கல பதக்கத்தை வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை மூலமாக ஒட்டுமொத்த நாட்டின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆண்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…