இந்தியா ஒருதலைப்பட்சமாக நடக்க வேண்டாம்.! எல்லையைத் தாண்ட வேண்டாம் – சீனா

Published by
கெளதம்

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.ஆனால் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை .

இதற்கிடையில் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

எல்லையைத் தாண்ட வேண்டாம், சிக்கலைத் தூண்ட வேண்டாம் :

இது குறித்து கருத்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திங்களன்று இந்திய துருப்புகள் தான் இரண்டு முறை எல்லையைத் தாண்டி, “சீன ராணுவத்தினரை தூண்டிவிட்டு தாக்கினர் , இதன் விளைவாக இரு தரப்பிலும் எல்லைப் படைகளுக்கு இடையே கடுமையான  ஏற்பட்டன என்று தெரிவித்தார் .

இந்தியா அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் அதன் முன்னணி துருப்புக்களைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார் .எல்லையைத் தாண்ட வேண்டாம், சிக்கலைத் தூண்ட வேண்டாம், இது மேலும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் எனவும் இந்த பிரச்சனையில் இந்தியா ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறினார் .

Published by
கெளதம்

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

34 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

60 minutes ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

1 hour ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

3 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago