இறக்குமதி கூடாது! சீன மின் சப்ளை இறக்குமதியும் கட்??! மத்திய அரசு அதிரடி

Published by
kavitha
“சீனா.,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மின் வினியோக சாதனங்களை இறக்குமதி செய்ய கூடாது. இந்தியாவின் மின் வினியோகத்தினை சீன முடக்கும் அபாயம் இருப்பதால் இறக்குமதி செய்யக் கூடாது என்று மின் வினியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது”.

லடாக் எல்லைப்பிரச்னைக்குப் பின், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை  விதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை , மெட்ரோ ரயில் ஒப்பந்தங்கள், போன்றவைகளை சீன நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என, அத்துறை முடிவு செய்து உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்திய ரயில்வே, ‘சிக்னல்’ திட்டம் தொடர்பாக, சீன நிறுவனத்திற்கு வழங்கி இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்., மாநில மின்துறை அமைச்சர்களுடன் நேற்று திடீரென ‘வீடியோ கான்பரன்ஸ்’ முலமாக பேசினார். அமைச்சர்களிடம்  சிங் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதும், ஆண்டுக்கு 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அதில், சீனாவின் பங்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த அளவிற்கு வர்த்தக வாய்ப்பளிக்கின்ற இந்திய நாட்டில், சீனா அத்துமீறியுள்ளதை ஏற்க முடியாது. அதனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.இப்பொழுது , பி.ஆர்., எனப்படுகின்ற முன்னுரிமை அந்தஸ்தின் கீழாகவே அண்டை நாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இனி, சீனா, பாக்., பொருட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மின் சாதனங்களில், ‘மால்வேர் அல்லது ட்ரோஜன்’ ஆகிய வைரஸ்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அவற்றின் மூலமாக  எங்கிருந்தும், இந்திய மின் வினியோகத்தை முடக்குகின்ற ஆபத்து உள்ளது.எனவே அதனால், மின் வினியோக நிறுவனங்கள், சீன நிறுவனங்களின் மின்சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.

அப்படியே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று தான் இறக்குமதி  வேண்டும். அவ்வாறு இறக்குமதியாகும் சாதனங்கள், பலகட்டமாக ஆய்வு செய்யப்படும். அதில் அரசுக்கு  திருப்தியில்லையெனில் திருப்பி அனுப்பப்படும்.

மத்திய அரசின், ‘உதய்’ உள்ளிட்ட மூன்று திட்டங்களில் இணைந்துள்ள மாநிலங்களில், மின் வினியோக நிறுவனங்களின் நிதியுதவிக்கு, புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, மின் வினியோக நிறுவனங்களின் இழப்பை குறைப்பதற்கான திட்டங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.இதனைப் பின்பற்றாத மின்நிறுவனங்களுக்கு, கடன் அல்லது மானியம் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் தான் மத்திய அரசு  பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து மின்சாதனங்கள் இறக்குமதிக்கு, மின் வினியோக நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற அரசாணையை நேற்று மாலையே மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

1 hour ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

2 hours ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

6 hours ago