கேரளா வளர்ச்சி அடைந்தால் நாடே வளர்ச்சி அடையும்.! பிரதமர் மோடி உரை.!

Published by
மணிகண்டன்

கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும். – கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கிய பின்னர் பிரதமர் மோடி பேச்சு.

பிரதமர் மோடி இன்று கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சி நகரின் அருகே உள்ள 11 தீவுகளை இணைக்கும் வண்ணம் மெட்ரோ கடல் போக்குவரத்து சேவையை பிரதமர் துவங்கினார். இதன் மூலம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அந்த மெட்ரோ கப்பல் மூலம் பயணித்து கொள்ளலாம்.

Water Metro Kochi

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அந்த விழாவில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகுபிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

[Image source : Twitter]
அவர் பேசுகையில், இந்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும் எனவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

34 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago