கேரளா வளர்ச்சி அடைந்தால் நாடே வளர்ச்சி அடையும்.! பிரதமர் மோடி உரை.!

Published by
மணிகண்டன்

கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும். – கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கிய பின்னர் பிரதமர் மோடி பேச்சு.

பிரதமர் மோடி இன்று கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சி நகரின் அருகே உள்ள 11 தீவுகளை இணைக்கும் வண்ணம் மெட்ரோ கடல் போக்குவரத்து சேவையை பிரதமர் துவங்கினார். இதன் மூலம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அந்த மெட்ரோ கப்பல் மூலம் பயணித்து கொள்ளலாம்.

Water Metro Kochi

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அந்த விழாவில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகுபிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

[Image source : Twitter]
அவர் பேசுகையில், இந்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும் எனவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago