குட் நியூஸ்: கொரோனாவால் உங்கள் ரயில் டிக்கெட் ரத்தானதா? பணத்தை திரும்ப பெற கால அவகாசம் நீட்டிப்பு!

Published by
Surya

கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

கொரோனாவும், ஊரடங்கும்:

உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்க தொடங்கியது.

கால நீட்டிப்பு:

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் 21 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்பப்பெற மத்திய அரசு, பயண தேதியில் இருந்து 6 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த காலநீட்டிப்பானது, ஆறு மாத காலத்தில் இருந்து ஒன்பது மாதமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

திரும்ப பெரும் வழிமுறை:

முன்பதிவு செய்த பயண தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு பின் பயணிகள், ரயில்வே மண்டல அலுவலகத்திலோ, TDR மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். அவ்வாறு முன்பதிவு மையங்களில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு முழு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களுக்கு பொருந்தும்:

அதுமட்டுமின்றி, 139 என்ற எண் மூலமாகவோ, ஐ.ஆர்.சி.டி.சி. ஆப் அல்லது வலைத்தளம் மூலமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பு, பயணம் செய்யும் தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago