இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் பேசினார். அவர் பேசுகையில் இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.
ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் இணைந்து செயல்படும்போதுதான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்தில் விபத்து காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. 2019 மார்ச் மாதம் கடைசியாக ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…