ஒன்றாக இணைந்து , கொரோனாவை வெல்வோம் என ட்விட்டரில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் 68,35,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 58,27,704 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,02,425 ஆக உள்ளது.1,05,526 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பல்வேறு விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் , “ஜன் அந்தோலன் ” என்ற விழிப்புணர்வை தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். முககவசம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ‘6 அடி தூர இடைவெளியை’ பின்பற்ற வேண்டும் . ஒன்றாக இணைந்து, நாம் வெற்றி பெறுவோம். ஒன்றாக இணைந்து , நாம் கொரோனாவை வெல்வோம். #Unite2FightCorona என்று பதிவிட்டுள்ளார்.பிரதமரின் இந்த பதிவை தொடர்ந்து பலரும் #Unite2FightCorona என்ற ஹேஷ் டேக்கில் கொரோனாவை விரட்டுவோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…