இந்தியாவின் முதல் குளோன் செய்யப்பட்ட கிர் பசுவான கங்காவை ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியாவின் முதல் குளோனிங் பசுவான ‘கங்கா’வை ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். அவருடன் முதல்வர் மனோகர் லால் கட்டார் உடனிருந்தார். இதையடுத்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) 19வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
ஹரியானாவில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 16 ஆம் தேதி 2023 அன்று பிறந்த இந்த பசுவை விஞ்ஞானிகள் குளோனிங் செயல்முறை மூலம் உருவாக்கியுள்ளனர். அதற்கு கங்கா என்று பெயரிடப்பட்டது. இந்த குளோன் செய்யப்பட்ட கன்று பிறக்கும் போது 32 கிலோ எடையுடன் இருந்தது.
இத்தகைய கிர் இன மாடுகள் தரமான மற்றும் சுத்தமான பாலைக் கொடுக்கும். அந்த பாலின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்துடன், புதிய குணாதிசயங்களை அறிமுகப்படுத்தி குளோனிங் கன்று உருவாக்கப்பட்டுள்ளது. என்டிஆர்ஐ கடந்த 2009ம் ஆண்டு உலகின் முதல் குளோன் எருமையையும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…