ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ! சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் படி சிதம்பரம் அமலாக்கத்துறை காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுததியபோது ,சிதம்பரத்திடம் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இன்றுடன் அந்த காவல் முடிவடைந்த நிலையில் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் சிதம்பரத்துக்கு திகார் சிறையில் சலுகைகள் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.விதிகளுக்கு உட்பட்டு தனி சிறை வசதி கொடுக்கலாம்.மூன்று வேளையும் வீட்டு உணவு வழங்கலாம். சிதம்பரத்துக்கு போதுமான மருத்துவ வசதி மற்றும் வெஸ்டர்ன் கழிவறை வசதி அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025