காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது ? என்று ராகுல் காந்தி கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் ,காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோனியா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ராகுல் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் குற்றச்சாட்டிற்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்ற வருகிறேன் .30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் தெரிவித்தது இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…