அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என ரோஜா குறித்து கேள்வி எழுப்பும் சமூகவலைதளவாசிகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கடைகளும், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகையும், எம்.எல்.ஏ -வுமான ரோஜா அவர்கள், ஆந்திரா மாநிலம், சித்தூரில் உள்ள கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றுள்ளார். அப்போது அவரை ஊர்மக்கள் அனைவரும் மலர்தூவி வரவேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதனை பார்த்த வலைதளவாசிகள், கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவிவரும் சூழலில், அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…