அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என ரோஜா குறித்து கேள்வி எழுப்பும் சமூகவலைதளவாசிகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கடைகளும், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகையும், எம்.எல்.ஏ -வுமான ரோஜா அவர்கள், ஆந்திரா மாநிலம், சித்தூரில் உள்ள கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றுள்ளார். அப்போது அவரை ஊர்மக்கள் அனைவரும் மலர்தூவி வரவேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதனை பார்த்த வலைதளவாசிகள், கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவிவரும் சூழலில், அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…