உலக வல்லரசுகளுக்கு இணையாக விண்வெளியில் கலக்க இருக்கும் இந்தியா.. நான்கு வீரர்கள் தேர்வு.. பயிற்சிக்கும் தயார்..

Published by
Kaliraj
  • கடந்த 2018 ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ககன்யான் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
  • இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர்ச்சிக்கு ரஷ்யா பயணம்.
    இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு   4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.
இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற  ரஷியாவும் உதவ முன்வந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைமை இயக்குனர் டிமிட்ரி ரோகாசின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மாஸ்கோவில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ககன்யான் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ .10,000 கோடி ஒதுக்கியுள்ளது.
இதில், விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு   அவர்களுக்கு ரஷியாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று விண்வெளித் துறை  தெரிவித்துள்ளது. அந்த நான்கு விண்வெளி வீரர்களும் 11 மாதங்களுக்கு அங்கு  பயிற்சி பெறுவார்கள்.அவர்களின் பயிற்சி வரும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும்.இவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான   ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட்டில், விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல இருக்கிறது.
Published by
Kaliraj

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

19 hours ago