16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு.
மத்தியபிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இவருக்கு 15 குழந்தைகளை பெற்றேடுத்த நிலையில், 4 ஆண்குழந்தையும், 4 பெண் குழந்தையும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மீதம் 7 குழந்தைகளும் பிறந்து சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், இப்பெண் தனது 16-வது பிரசவத்திற்காக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே, தாயும், சேயும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தாயும், சேயும் இறந்துவிட்டதாக, அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண் ஊழியர் கூறுகையில், ‘பிரசவத்தின் போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மோசமான உடல்நிலையால் சோர்வுற்று இருந்தார். அதனால், குழந்தையையும், தாயையும் காப்பாற்ற முடியவில்லை. அப்பெண் 16-வது முறையாக தாயாகி தற்போது இறந்துவிட்டார்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…