கெஜ்ரிவால் இல்லத்தில் நான் தாக்கப்பட்டது உண்மை..! ஸ்வாதி மலிவால் பேட்டி.!

Published by
மணிகண்டன்

சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நான் தாக்கப்பட்டது உண்மை என்றும், அப்போது யாரும் எனக்காக உதவ முன்வரவில்லை என்றும் ஸ்வாதி மலிவால் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

டெல்லி முன்னாள் மாநில மகளிர் ஆணைய தலைவியும், ஆம் ஆத்மி கட்சி ராஜ்ய சபா எம்.பியுமான ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டார் என டெல்லி காவல்துறையில் புகார் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த புகாரில் ஸ்வாதி மலிவாலிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த மே 19ஆம் தேதி பிபவ் குமாரை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஸ்வாதி மலிவால் இன்று ANI செய்தி நிறுவனத்திடம் விரிவான பேட்டியை அளித்தார்.

அப்போது அந்த பேட்டியில் மே 13ஆம் தேதி நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க முதல்வர் இல்லத்துக்கு மே 13இல் சென்றிருந்தேன். ஊழியர்கள் என்னை டிராயிங் ரூமில் காத்திருக்கச் சொன்னார்கள். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருப்பதாகவும், அவர் என்னைச் சந்திக்க வருவதாகவும் சொன்னார்கள். இதற்கிடையில், அவரது உதவியாளர் பிபவ் குமார் வந்தார். என்னைத் திட்டிய அவர், என்னை 7-8 முறை அறைந்தார். நான் காவல்துறையை அழைத்தேன். உடனே அவர் வெளியே சென்று செக்யூரிட்டியை அழைத்தார். அதன் பிறகு வெளியான 50 வினாடிகள் கொண்ட  வீடியோதான் இணையத்தில் வைரலானது, ஆனால் உண்மையான ஆதாரங்களை அவர்கள் சிதைத்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் டிராயிங் ரூமில் நான் தாக்கப்பட்டது உண்மை. நான் புகார் அளித்த தருணத்தில், ஒட்டுமொத்தக் கட்சியும் (ஆம் ஆத்மி) எனக்கு எதிராக திரும்பியது. மீண்டும் மீண்டும் எனது குணத்தை குறைகூறி அவமானப்படுத்தினார்கள். எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் கசிந்தன. சிசிடிவி காட்சிகள் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ‘112’க்கு போன் செய்தபோது வலி மற்றும் அதிர்ச்சியில் இருந்தேன். அவர் (பிபவ் குமார்) என்னை மீண்டும் தாக்கக்கூடும் என்று அப்போது நினைத்தேன். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அதற்க்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என மே 13அன்று நடந்த சம்பவம் பற்றி ஸ்வாதி மலிவால் ANI நேர்காணலில் பேட்டியளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

23 minutes ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

44 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

4 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

5 hours ago