தனது தலைக்கு மேலே சுற்றும் மருத்துவமனையில் உள்ள மின்வசிறி மிகப் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவது போல உள்ளதாக நோயாளி ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரு நாளுக்கு நாள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மருத்துவர்கள் திணறுகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த இளைஞர் இருக்கக்கூடிய படுக்கைக்கு மேலே சுற்ற கூடிய மின் விசிறி வித்தியாசமாக சற்று பயமுறுத்தும் வகையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள அந்த இளைஞர், எனக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் கண்டு கூட பயம் இல்லை. ஆனால், என் தலைக்கு மேல் இருக்கக் கூடிய மின் விசிறியை பார்த்தால் தான் பயமாக உள்ளது என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…