ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஏறிய 3 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை நடத்தியது தெரிய வந்துள்ளது. தாக்குதலின்போது, பேருந்து பயணிகள் கூச்சலிட்டத்தால் அந்த மாணவனை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியுள்ளது. பின்னர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த வேனில் சென்ற 15 விவசாயிகள் உடல் சிதறி பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள மன்பிஜில் நடந்த இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. […]
மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார். மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு […]
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அப்போது, ஒரு ஆட்டோ டிரைவர் சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இப்போது சைஃப் அலிகான் குணமடைந்துவிட்டதால், அவர் ஆட்டோ டிரைவர் பஜன் சிங்கை சந்திக்கிறார். […]
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மூன்று நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தாக்குதல் […]
சென்னை : திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை […]
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital) நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உட்பட7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்தின்போது மருத்துவமனையில் சிக்கி கொண்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மருத்துவமனையின் […]
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பலியாகினர். பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின்போது, குழந்தைகள் வார்டில் 54 பேர் இருந்த நிலையில், 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 16 குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியாக, இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் இந்த […]
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது, அரசு மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் கடந்த 30- ந்தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடந்த பரி சோதனையில் ரஜினிகாந்தின் இதயத்தில் இருந்துரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர, உடல் பரிசோதனைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் ICUவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது என்றும், ரத்தக்குழாய் வீக்கத்திற்கு STENT பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : நேற்று உடல் நலக்குறைவால் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் பதிவு இந்நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த பல்வேறு அரிசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். Read More- நடிகர் ரஜினிகாந்த் […]
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரிசியல் தலைவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட தகவலைப் பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரசிகர்களுக்கு ஆறுதலான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]
நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்கிய 14 […]
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் […]
Mumbai: சிக்கன் ஷவர்மா சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது, மும்பையில் சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மும்பையின் கோரேகான் பகுதியில் தெரு உணவை சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில் ‘ஃபுட் பாய்சன்’ சம்பந்தமான அறிகுறைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சாட்டிலைட் டவரில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ஆசிய […]
கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார். விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் […]