ஜம்மு – காஷ்மீர் இன்று முதல் புது மாற்றத்தை சந்திக்கிறது – இனி அது கிடையாது

Published by
Venu

இன்று  காஷ்மீர் மற்றும் லடாக்  அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர்  மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகிவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.

Published by
Venu

Recent Posts

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

5 minutes ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

26 minutes ago

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

3 hours ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

3 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

4 hours ago