ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் வெள்ளம் : 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் மாயம்!

Published by
Rebekal

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹென்சார் கிராமத்தில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மேகமூட்டமாக காணப்பட்டதால், வெள்ளத்தில் 40க்கு மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலைகள், பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து கூறிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் அவர்கள், கிஷ்த்வார்  மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago