Jharkhand CM Hemant Soren [Image source : PTI]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன் மீது வேண்டுமென்றே அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது என முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் .
நில மோசடி வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டு இருந்தது. அந்த தேதியில் முதல்வர் சோரன் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராகவில்லை. மாறாக, அந்த சம்மனுக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசு மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குறிப்பிட்டுள்ளார்.
12க்கும் மேற்பட்ட நில மோசடிகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. 1932 ஆம் ஆண்டு வரையிலான போலி ஆவணங்களை உருவாக்குவதற்கு நில மாஃபியா, இடைத்தரகர்கள் மற்றும் மாநில அரசுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு நிலம் தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…