ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் விவகாரம்… போராட்டத்திற்க்கு பிரபல பாலிவுட் நடிகை நேரில் சென்று ஆதரவு..

Published by
Kaliraj
  • தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று  நடந்தது.
  • அப்போது, அங்கு முகத்தை மூடி துனியை  அணிந்து வந்த மா்ம நபர்கள் இரும்பு கம்பி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால்  மாணவர்களை சரமாரியாக கொடூரமாக  தாக்கினர்.
   இந்த கொடூர  தாக்குதலில் பல மாணவர்கள்  காயம் அடைந்தனர். இந்த மாணவர்கள் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தங்களது  கண்டனத்தை  தெரிவித்திருந்தனர். இந்த  தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில்,  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது என்றும் அதனால் தான்  நாங்கள்  இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக   டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி   ஜவஹர்லால் நேரு பல்கலைகழக  வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்   மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு  பிரபல பாலிவுட் நடிகையான  தீபிகா படுகோனே திடீரென போராட்டம் நடக்கும் இடத்திற்க்கே நேரில் சென்று தனது ஆதரவை  தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு  தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் மிகப்பெரிய பூதாகரமாக வெடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Kaliraj

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago