#JustNow: எல்ஐசி-யின் ஒரு பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்.12-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. காப்பீட்டு நிறுவனத்தின் 5 % பங்குகளை or 31.6 கோடி பங்குகளை மத்திய அரசு விற்கும் என்று கூறியிருந்தது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (LIC) மெகா ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9 நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, எல்ஐசியின் 3.5% பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் மூலம் மத்திய அரசு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன்மூலம், ரூ.21 ஆயிரம் கோரி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இன்று வாரியம் கூடி சரியான அளவு மற்றும் விலையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் விற்பனை ஐபிஓ வாயிலாக மே 4-ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 9-ஆம் தேதி முடிவடையும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது. அதன்படி, மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடியுடன், பங்கு ஒன்றின் விலை ரூ.902-ரூ.949 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  மே 9 வரை எல்.ஐ.சி-யின் 3.5% பங்குகளை, பொதுப்பங்கு (ஐபிஓ) வழியாக விற்று ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

43 minutes ago

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…

1 hour ago

”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!

மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…

3 hours ago

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…

3 hours ago

பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…

4 hours ago

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.! என்னென்ன?

சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…

4 hours ago