கொரோனா நோயாளிகள் இருந்த படுக்கையறை காலியாகி இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாளுக்கு நாள் பறித்து கொண்டே இருக்கின்ற உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்நிலையில் டெல்லியில் 23 ஆயிரத்து 545 பேர் இதுவரை இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 500 முதல் 800 பேர் ஒரு நாளைக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாக இல்லை என கூறிவிட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் அதிக கட்டணம் தருவோரை அனுமதிப்பது தவறான முறை எனவும் பிற கட்சி தலைவர்களின் ஆதரவுடன் ஈடுபடக்கூடிய மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் எவ்வளவு படுக்கை அறைகள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான செயலியை செவ்வாய்க்கிழமை டெல்லி அரசு அறிமுகப்படுத்தும் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…