கேரள தங்கம் கடத்தல் கும்பல்! ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை! கைதாக வாய்ப்பு!

Published by
லீனா

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை.

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு, இந்த கும்பல்களுடன்  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகளும், சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த 2 விசாரணையின் போதும் சிவசங்கர் கூறிய பதில்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து, இன்று கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் மீண்டும் ஆஜராக உள்ள நிலையில், விசாரணை நடத்த டெல்லி, ஐதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கொச்சி வந்துள்ளனர். முதலில் சுங்க இலாகா, என்ஐஏவிடம் அளித்த பதில்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து சிவசங்கரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட அனைவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் மிக நீண்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து உள்ளனர். இந்த விசாரணை முடிவில் அவர் சுங்க இலாகா பதிவு செய்த வழக்கில் குற்றவாளி ஆவாரா? அல்லது என்ஐஏ பதிவு செய்துள்ள வழக்கில் குற்றவாளி ஆவாரா? என்பது தெரியவரும். மேலும், இன்றைய விசாரணைக்கு பிறகு சிவசங்கர் கைதானால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

2 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

23 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago