கேரள அரசு அதிரடி அறிவிப்பு.! வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலில் கேரள மாநிலம்தான் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 5வது இடத்தில இருக்கிறது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345 ஆகவும், உயிரிழப்பு 2 ஆகவும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் குணமடைந்துள்ளார்கள். இப்போது 259 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும், 1.40 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள், கொரோனாவால் உயிரிழப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களுக்கு, ஆன்லைன் மூலம் மருத்துவ உதவி வழங்க, ஐந்து மையங்கள் திறக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மருத்துவர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை காணொலி காட்சி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக https://norkaroots.org/web/guest என்ற இணையத்தை தினமும் பகல் 2:00 முதல் 6:00 மணி வரை இந்திய மேற்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என கூறியுள்ளார். 

மேலும் கொரோனா சிகிச்சைக்காக ஆயுர்வேதத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அது நல்ல பலன் அளிக்கும் என, சுகாதாரத் துறை அமைச்சரும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருந்த கேரளா தற்போது, 5வது இடத்திற்குச் சென்றுள்ளது என்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு கேரள அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளே காரணம் என பலர் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.இதனை அணைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கருது தெரிவித்து வருகின்றனர். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

6 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

7 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

8 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

8 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

11 hours ago