48 தமிழ் குடும்பங்களிடம் வாடகை கேட்ட கேரள வீட்டு உரிமையாளர்.! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைப்பு சாரா தினக்கூலிகள், கட்டட வேலை செய்பவர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதனால், கேரளாவில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொள்வயலால் எனும் ஊரில் 48 தமிழ் குடும்பங்கள் குடியிருப்பு ஒன்றில் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர்.
அவர்கள் மரம் வெட்டும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையின்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் அவர்களிடம் குடியிருப்பு உரிமையாளர் வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. மேலும், வீட்டு வாடகை கொடுக்காத ஒரு முதியவரின் வீட்டை பூட்டி அவரை வெளியேற்றியதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, காசர்கோடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததன் பேரில், அந்த குடியிருப்பில் இருந்த 48 தமிழ் குடும்பங்களிடமும் வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

3 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

3 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

5 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

5 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

7 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

8 hours ago