இந்த ஊரை மறக்க முடியாது.! திரும்பவும் இந்தியா வருவேன்.! – நெகிழும் அமெரிக்காவாசி.!

Published by
மணிகண்டன்

கொச்சியில், 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனால், கேரளா மாநிலம் கொச்சியில் சுற்றுலா வந்திருந்த ஏஞ்சலா சான்செஸ் என்பவர் தனிமைப்படுத்தி கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இதனால், தங்குவதற்கு விடுதிகளில் இடம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் விடுதியில் இடம் தரவில்லை.

இதனையடுத்து, கொச்சியை சேர்ந்த ஜான் என்பவர் தனது வீட்டை அதிகாரிகளின் அனுமதியோடு ஏஞ்சலா சான்செஸை தங்கவைத்துள்ளார். மேலும், அவர் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள், சமையல் பொருட்களை ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. எனது அம்மாவும், பிள்ளையும் அமெரிக்காவில் இருப்பதால் இங்கு வரவேண்டியதாய் இருந்தது. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

20 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

44 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

58 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago