கொச்சியில், 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனால், கேரளா மாநிலம் கொச்சியில் சுற்றுலா வந்திருந்த ஏஞ்சலா சான்செஸ் என்பவர் தனிமைப்படுத்தி கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இதனால், தங்குவதற்கு விடுதிகளில் இடம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் விடுதியில் இடம் தரவில்லை.
இதனையடுத்து, கொச்சியை சேர்ந்த ஜான் என்பவர் தனது வீட்டை அதிகாரிகளின் அனுமதியோடு ஏஞ்சலா சான்செஸை தங்கவைத்துள்ளார். மேலும், அவர் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள், சமையல் பொருட்களை ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. எனது அம்மாவும், பிள்ளையும் அமெரிக்காவில் இருப்பதால் இங்கு வரவேண்டியதாய் இருந்தது. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என கூறினார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…