கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்.., முற்றுகை..!

Published by
murugan

கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். 

மேற்குவங்கத்தில் 2016-ம் வருடத்தில் நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரகசிய கேமரா மூலம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த நாரதா ஊழல் குறித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தற்போதைய அமைச்சர்களான  ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி மற்றும் மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4 பேரை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருந்தது. கல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது.

இதற்கிடையில், ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகிய இரு அமைச்சர்களை கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தனர்.  அமைச்சர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றார். அங்கு சென்ற மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம்.

மேலும் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை யிட்டுள்ளனர்.  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டுள்ளனர்.

நாரதா முறைகேடு:

மேற்குவங்கத்தில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாரதா செய்திச் சேனல் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் லஞ்சம் வாங்குவதாக வீடியோ எடுத்து நாரதா வெளியிட்டது.

சில போலி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட பணம் பெறுவது போல வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

55 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago