டீக்கடை நடத்தி சம்பாதித்த பணத்தில் மனைவியுடன் உலகம் சுற்றிய கே.ஆர்.விஜயன் காலமானார்!

Published by
Rebekal

டீக்கடை நடத்தி சம்பாதித்த பணத்தில் மனைவியுடன் உலகம் சுற்றி பிரபலமடைந்த கே.ஆர்.விஜயன் காலமானார்.

கேரள மாநிலம் கொச்சியில் டீ கடை வைத்து நடத்தி வந்தவர் தான் கே ஆர் விஜயன். இவருக்கு 71 வயது ஆகிறது. இவருக்கும் அவரது மனைவி மேகனாவுக்கும் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

எனவே கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன் அதன் மூலமாக கிடைத்த வருமானத்தை தனது கனவை நினைவாக்குவதற்காக சேர்த்து வைத்துள்ளார். அதன் பின்பாக டீக்கடை வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து தனது மனைவியுடன் இணைந்து அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்தார்.

இவர்களின் உலகம் சுற்றும் பயணம் ஊடகங்களில் வெளியாகி வைரலாகியதை தொடர்ந்து, சில தனியார் நிறுவன தலைவர்கள் இவர்களது உலகம் சுற்றும் பயணத்திற்கு உதவியும் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கூட இருவரும் ரஷ்யா சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கே ஆர் விஜயன் அவர்கள் தற்பொழுது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

Published by
Rebekal

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

46 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago