கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு.. முஸ்லிம் தரப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!

Published by
murugan

உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி,  ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில்  மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்று இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் இந்துக் கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம் என்றும் மசூதி  அமைந்துள்ள பகுதி கோவில் இருந்ததற்கான பல்வேறு தடயங்கள் இருப்பதாகவும் இதுகுறித்து அறிவியல் ஆய்வு உத்தரவிட வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது. மேலும் யார் தலைமையில் ஆய்வு நடத்த வேண்டும் என்பதை நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் மறுப்பு: 

இதைத்தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது,  ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்  வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கிருஷ்ணன் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மதுரா நீதிமன்றத்தில் இருந்து கடந்த மே மாதம் அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. மசூதியும், கோயிலும் அக்பரால் 1585 இல் தீன்-இ-இலாஹியின் கீழ் கட்டப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். 1669-ல் முகலாய மன்னன் ஔரங்கசீப் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக இந்து தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றன. ஔரங்கசீப் தீன்-இ-இலாஹிக்கு எதிரானவர் என்றும் அதனால் கோவிலை இடிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார் என பலர் கூறி வருகின்றனர்.

1582-ஆம் ஆண்டு அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் “தீன் இலாஹி” என்ற மதத்தை அக்பர் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

19 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

49 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago