லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோதலுக்கு பின்னர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மறுபக்கம் லடாக்கில் சீனா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருகிறது.
சீனா – இந்தியா இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்கு முன் தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
சீன தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 வீரர்கள் திபெத் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது. “என்போ பைட் கிளப்” சர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில் பங்கேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…