அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியை ஒரு மிகப் பெரிய விண்கல்லான ‘விண்கல் 2020 ND’ என்பது வரும் ஜூலை 24ம் தேதி கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது மட்டுமின்றி மேலும் 2016 DY30 மற்றும் 2020 ME3 என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு விண்கற்களும் பூமி கிரகத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை தாண்டி செல்லும் என்றும் கூறியுள்ளனர். இந்த விண்கற்களும்’ அபாயகரமான விண்கற்கள்’ (PHA) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாசா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விண்கற்களும் 0.05 வானியல் அலகயோ, அதற்கு குறைவான சுற்று வட்டப்பாதை தூரத்தை கொண்டிருந்தால், அவை அபாயகரமான விண்கற்களாக கருதப்படும் என்று கூறியிருந்தது.
இதில் 170 மீட்டர் நீளமுடைய 2020 ND விண்கல் மணிக்கு 48,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், இந்த விண்கலம் பூமி கிரகத்திற்கு 5,086,328 கிலோமீட்டர் அளவிற்கு அதாவது 0.034 வானியல் அலகுக்கு நெருக்கமாக இருக்கும் என்றும், இது பூமிக்கு அருகே வரும் தூரம் ஆபத்தானது என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், பூமியின் திசையில் 15அடி நீளத்தில் அகலமாக இருக்கும் சிறிய விண்கல்லான 2016 DY30 விண்கல் மணிக்கு 54,000கிலோ மீட்டர் வேகத்திலும், 2020 ME3 என்ற விண்கல் மணிக்கு 16,000 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், 2016 DY30 விண்கல் பூமியை 0.02306 வானியல் அலகில் அதாவது 3.4 மில்லியன் கிலோமீட்டர் வரை நெருங்கி வரும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் ஆய்வு மையமான சி. என். இ. ஓ எஸ் கணித்துள்ளது.
மேலும், பூமியில் இருந்து சுமார் 5.6 மில்லியன் கிலோமீட்டர் அதாவது 0.03791 வானியல் அலகு வரையில் மிக தொலைவில் இருக்கும் 2020 ME3 என்ற விண்கல் பூமியை வரும் ஜூலை 21-ம் தேதி நெருங்கி வரும் என்றும், அந்த இரண்டு பெரிய விண்கற்கள் ஜூலை 19-ம் தேதி காலை 10 அளவில் நெருங்கி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பெரிய விண்கற்களும் சூரியனை சுற்றி பயணம் செய்கையில் பூமியை கடப்பதால் அப்பல்லோ விண்கல் என்றும், பூமியின் பாதையை கடக்காத சிறிய விண்கல்லான 2020 ME3 யை அமோர் விண்கல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…