கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆக்ஸிசன் சிலிண்டருடன் யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டதுடன் அவரின் தன்னபிக்கையை பாராட்டினர். இந்நிலையில் திருவந்தபுரத்தில் நடந்த யுபிஎஸ்சி தேர்வு எழுத தனது தந்தையுடன் தன்னபிக்கை மிளிர தேர்வெழுத வந்த ஒரு பெண்ணின் விடாமுயற்சி தற்போது அனைவராலும் பாரட்டுக்கு உள்ளாகியுள்ளது .
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் லதிஷா (25 ) வயது ஆனவர் பிறப்பு முதல் இருந்தே எலும்பு நோய்க்கு அவதிப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவருடைய நுரையீரலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளது அதனால் ஆக்ஸிசன் சிலிண்டர் இல்லாமல் லதிஷாவால் வெளியே செல்ல முடியாது.
தன்னபிக்கை தாரகையை பெற்றோர் மிக கவனமாக வளர்த்து வந்துள்ளனர். ஐஏஎஸ் ஆகுவது இவருடைய கனவாகும் அதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.மேலும் வணிகவியல் பிரிவில் எம்.காம் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
நேற்று நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.திருவனந்தபுரத்தில் பள்ளி ஒன்றில் ஆக்ஸிசன் சிலிண்டர் உதவியுடன் சக்கர நாற்காலயின் அமர்ந்து லதிஷா தேர்வு எழுதினார்.இதற்கான ஏற்பாடுகளை செய்த கோட்டம் ஆட்சியருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தன் உடல் நலத்தை எதிர்பார்க்காமல் கனவை எதிர்நோக்கிய லதிஷாவின் தைரியம் ,தன்னபிக்கை,விடாமுயற்சி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…