பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனை அடுத்து சிவசேனா அமைப்பினர் மற்றும் காலிஸ்தான் அமைப்பினர் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கைகலப்பு உருவாகியிருந்தது.
தற்பொழுதும் இது தொடர்பாக பேசி உள்ள காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அவர்கள், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து வருவதாக தெரிவித்துள்ளார் மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் வன்முறை வேண்டாம் என்று தனது தொண்டர்களிடம் சொல்வதிலிருந்து ஏன் விலகி நிற்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் தனக்கு எதிராக இருப்பவர்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி விடுகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…