ManishSisodia [Image Source : PTI]
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
டெல்லியில் புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, ஏப்ரல் 29 வரை நீட்டிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் காலாவதியாகிய நிலையில், இன்று மணீஷ் சிசோடியா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் நிலையில், கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…