இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள போக்குவரத்து சேவைகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்திய ரயில்வே சில பயணிகள் ரயில்களுக்கான செயல்பாடுகளை ரத்து செய்துள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கு ரயில்வே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரையிலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவை முழுமையாக திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…