HimachalFloods [File Image]
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுமார் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியா முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
குறிப்பாக, இமாச்சலப் பிரதேசம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
மேலும், மழையினால் ஏற்பட்ட சேதத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும் என்றும், மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க முயற்சிக்கிறோம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…