மத்திய பிரதேசம்:ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்கும் மின்சார வாரியம்.!

Published by
Ragi

மத்திய பிரதேசத்தில் உள்ள மின்சார வாரியம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் மின்சார செலவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பலர் மின்சார கட்டண உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மேற்கு பிராந்திய மின் விநியோக நிறுவனம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலைமை பொது மேலாளர், கடந்த பல ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் நிறுவனத்தின் வருமானம் சரிந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த மின் விநியோக நிறுவனம் 16 மாவட்டங்களில் உள்ள 4.5 மில்லியன் பயனர்களுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்வதாகவும், இதில் ஏழரை லட்சம் பயனர்கள் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை, அதற்காக பலமுறை எச்சரித்துள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் அவர்களது மின்சார இணைப்பை துண்டிப்பதற்பான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago