பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்திய பெற்றோர்களை “சாவுங்க” என கூறிய மத்திய பிரதேச அமைச்சர்!

Published by
Rebekal
மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை போய் சாவுங்க எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலித்ததால் பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பரமர் அவர்களது இல்லத்திற்கு பெற்றோர்கள் நேரில் சென்று உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் கருத்தை கேட்க மறுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், போய் சாவுங்க அல்லது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் பெற்றோர்கள் சங்கம் அமைச்சர் இந்தர் சிங் மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதுடன், இவர் மீது அவதூறு வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இவரது பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்களின் ஊடக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் பேசுகையில், பெற்றோர்கள் சங்கம் நிவாரணம் கோரி அமைச்சரை சந்திக்க சென்ற பொழுது பொறுப்பற்ற முறையில் பெற்றோர்களை நடத்திய அமைச்சர் இந்தர் சிங், போய் சாவுங்க யாரும் கவலைப்பட மாட்டார்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் நாங்கள் சாக வேண்டுமா என கூறியபொழுது ஏன் சாகவேண்டும் பொறுமையாக இருங்கள் என்ன விவகாரம் என்று தெரிந்துகொண்டு நான் பிரச் சினைகளை தீர்ப்பேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

46 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

1 hour ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago