Maharashtra Deputy CM Ajit Pawar [Image source : PTI ]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் விசாரணையில் முதல் குற்றப்பத்திரிக்கை முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது மனைவிக்கு தொடர்புடைய நிறுவனம் ஒன்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
கூடுதல் குற்றப்பத்திரிகையில், அஜித் பவார் பெயர் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அந்த குற்றப்பத்திரிகையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தன்பூரே, அவரது தந்தை மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரசாத் தன்பூரே, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரஞ்சீத் தேஷ்முக், சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலபேருடன் அஜித் பவார் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்து. அதற்கு முன்னதாக சரத் பவாருடன் இணைந்து, காங்கிரஸ் கூட்டணியில் அஜித் பவார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…