Categories: இந்தியா

மகாராஷ்டிரா: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு! 100 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் 100 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராய்கட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான இர்சல்வாடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன பெரும் விபத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வந்தனர். ராய்காட்டில் நிலச்சரிவில் ஏற்பட்டதை தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். NDRF தலைமையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய நிலையில், இப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கிராமத்தில் சுமார் 50 வீடுகள் உள்ளன.

அதில் 17 வீடுகள் நிலச்சரிவின் கீழ் புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆகா உயர்ந்துள்ளது,  இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

17 minutes ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

28 minutes ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

2 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

2 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

2 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

3 hours ago