மகாராஷ்டிரா: ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த MPSC- தேர்வுகள் ஒத்திவைப்பு…!

Published by
Edison

மகாராஷ்டிராவில், ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த 2021-ம் ஆண்டிற்க்கான ‘மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(MPSC) தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள “மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC)” தேர்வுகள் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தக்காரேயுடன்,MPSC தேர்வாணைய நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்தியது, அதைத் தொடர்ந்து MPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.

COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேர்வின் தேதியை சில நாட்களுக்கு தள்ளிவைக்குமாறு மாணவர்கள் இதற்கு முன்பு கேட்டுக்கொண்டதனால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக MPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021 ஏப்ரல் 23 முதல் மே இறுதி வரை கால அட்டவணையின்படி நடைபெறும் என்றும், மேலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படமாட்டாது,என்றும் மகாராஷ்டிரா கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் கொரோனாவால் மாநிலத்தின் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Edison

Recent Posts

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

6 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

25 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago