103 வயதில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த முதியவர்..!வைரலாகும் வீடியோ..!

Published by
Edison

மகாராஷ்டிரா மாநிலத்தில்,103 வயதாகும் ஷாம்ராவ் இங்க்லே என்ற முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின்,பால்கர் மாவட்டத்தில் உள்ள வீரேந்திர நகரைச் சேர்ந்த ஷாம்ராவ் இங்க்லே என்ற 103 வயதாகும் முதியவர்,சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் பால்கரில் உள்ள கிராமப்புற கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து,அம்மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஷாம்ராவ் என்ற 103 வயது முதியவர்,தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.இதனால்,கொரோனாவிலிருந்து விரைவில் குணமடைந்த முதியவர் மே 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று புன்னகையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்”,என்று கூறினார்.

இதனையடுத்து,பால்கர் மாவட்ட கலெக்டர்,மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மானிக் குர்சல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் இணைந்து கைகள் தட்டி,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த முதியவர் ஷாம்ராவ் இங்க்லேவுக்கு மலர்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Published by
Edison

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

24 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

55 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago