மஹாராஷ்டிராவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது மகாராஷ்டிரா மாநிலம். அம்மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,141 ஆக அதிகரித்துள்ளது. 47,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அம்மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அதற்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் கொரோனா தடுப்பு பற்றி மக்களிடம் கூறுகையில், பொதுமக்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், மற்ற மாநிலங்களில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பாதிப்பு அதிகமாகி வருவதை சுட்டி காட்டி பேசியுள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…