உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், காங்கிரஸ் விரும்பினால் 2024-ல் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024-ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை. இப்போதைக்கு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.
EVM-ல் கொள்ளை மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல் அதே EVM இயந்திரங்களின் தடயவியல் சோதனைகளை நாட வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20% லிருந்து 37% ஆக அதிகரித்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…