West bengal CM Mamta banarjee [Image source : PTI]
விமான பயணத்தில் பெய்த திடீர் மழை காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்து கிழே இறங்கும் போது மம்தா பேனர்ஜிக்கு காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த திங்கள்கிழமை இரவு ஜல்பைகுரி மாவட்டத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிராந்தியை அடைந்தார். அதன் பிறகு நேற்று மதியம் 1.20 மணியளவில், அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பாக்டோக்ராவுக்குச் சென்றார். அங்கு வானில் மேக மூட்டம் இருந்தது ஆனால் கிராந்தியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மழை அப்போது பெய்யவில்லை.
அதன் பிறகு ஹெலிகாப்டர் பாக்டோக்ராவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, சிலிகுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஜல்பைகுரி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை தீவிரமடைந்தது.
பைகுந்தபூர் வனப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது, மழையின் காரணமாக ஹெலிகாப்டர் வழியே பார்க்கும் திறன் குறைந்தது. இதனால், விமானி பாதுகாப்புப் படைகளின் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு, சிலிகுரியின் வடமேற்கில் உள்ள பாக்டோக்ராவிற்கு பதிலாக வடகிழக்கே செவோக் நோக்கிச் சென்று அங்குள்ள ராணுவ நிலையத்தின் ஹெலிபேடில் அவசரமாக தரையிறங்கினர்.
அவசரமாக தரையிறங்கிய பிறகு, முதல்வர் மம்தா பேனர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கியபோது தான் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு படையினர் வந்து கார் மூலம் ஏப்ரனுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் ஒரு சிறப்பு விமானத்தில் கல்கத்தா சென்றார். மம்தா கல்கத்தா வந்த பிறகு, அவர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யபட்டது.
மாலையில், மருத்துவமனையின் இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய், முதலமைச்சருக்கு இடது முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளில் தசைநார் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், வீட்டிலேயே தங்கி சிகிச்சையை தொடர்வதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு கிளம்பினார்.
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…
டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…