West bengal CM Mamta banarjee [Image source : PTI]
விமான பயணத்தில் பெய்த திடீர் மழை காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்து கிழே இறங்கும் போது மம்தா பேனர்ஜிக்கு காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த திங்கள்கிழமை இரவு ஜல்பைகுரி மாவட்டத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிராந்தியை அடைந்தார். அதன் பிறகு நேற்று மதியம் 1.20 மணியளவில், அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பாக்டோக்ராவுக்குச் சென்றார். அங்கு வானில் மேக மூட்டம் இருந்தது ஆனால் கிராந்தியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மழை அப்போது பெய்யவில்லை.
அதன் பிறகு ஹெலிகாப்டர் பாக்டோக்ராவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, சிலிகுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஜல்பைகுரி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை தீவிரமடைந்தது.
பைகுந்தபூர் வனப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது, மழையின் காரணமாக ஹெலிகாப்டர் வழியே பார்க்கும் திறன் குறைந்தது. இதனால், விமானி பாதுகாப்புப் படைகளின் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு, சிலிகுரியின் வடமேற்கில் உள்ள பாக்டோக்ராவிற்கு பதிலாக வடகிழக்கே செவோக் நோக்கிச் சென்று அங்குள்ள ராணுவ நிலையத்தின் ஹெலிபேடில் அவசரமாக தரையிறங்கினர்.
அவசரமாக தரையிறங்கிய பிறகு, முதல்வர் மம்தா பேனர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கியபோது தான் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு படையினர் வந்து கார் மூலம் ஏப்ரனுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் ஒரு சிறப்பு விமானத்தில் கல்கத்தா சென்றார். மம்தா கல்கத்தா வந்த பிறகு, அவர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யபட்டது.
மாலையில், மருத்துவமனையின் இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய், முதலமைச்சருக்கு இடது முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளில் தசைநார் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், வீட்டிலேயே தங்கி சிகிச்சையை தொடர்வதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு கிளம்பினார்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…