வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம்.
வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை மாநிலத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ், சிபிஐ (எம்) மற்றும் பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பிமான் பானர்ஜியும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இக்கூட்டமானது முதல்வர் தலைமையில் நடைபெற்று மூன்று மதத்திற்கு பின், மீண்டும் கூடவுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பதாக அங்கு 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 58 வயது முதியவர் ஒருவர் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்தால் காலமானார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மொத்தம் 14,358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 569 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, முதலமைச்சர் மம்தா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவதால், வங்காளத்தின் எண்ணிக்கை கணிசமாக உயரும், ஆனால் அதே நேரத்தில், மாநில அரசு முழுமையாக தயாராக இருப்பதால் குடிமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் உறுதியளித்திருந்தார்.
இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…